வெள்ளி, 29 டிசம்பர், 2023

ஏறுமயிலேறி -- Eru Mayil Eri (முருகன் பாமாலை)


             முருகன் பாமாலை


       


 ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே

ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே


கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.

பொருள்:

ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு
முகம்தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு
முகம்தான்.

உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும்
தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான். கிரெளஞ்ச மலையை
உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒரு
முகம்தான்.

உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன்
ஒரு முகம்தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து
ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம்தான்.

... அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை
நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மைவாய்ந்த
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

உள்விளக்கம்:

1. என் உள்ளமாகிய மயிலின்மீது ஏறி விளையாடியும்,

2. எனக்கு குருவாக வந்து உபதேசித்து அருளியும்,

3. என்னுடைய வினைகளையெல்லாம் தீர்த்தருளியும்,

4. என் மாயா பாசங்களை வேலால் உருவி ஒழித்தருளியும்,

5. என் அகங்கார மமகார மலங்களை அடக்கியருளியும்,

6. என்னை உன்னோடு புணர்த்தியருளியும்

... இவ்வாறு உன் ஆறு திருமுகங்களாலும் எனக்கு கருணை புரிவாயாக.

மற்றும்:

இறைவனுடைய ஐந்து திரு முகங்கள் பரத்தையும், உமா தேவியின்

திரு முகம் இகத்தையும் நல்கும். இந்த ஆறு முகங்களும் சேர்ந்து
இகபர செளபாக்கியத்தை அருளும்.

வியாழன், 28 டிசம்பர், 2023

முத்தைத்தரு பத்தித்(MUTHAI THARU)- திருப்புகழ் - (THIRUPPUGAZH)

   திருப்புகழ் 

திரு அருணகிரிநாதர்  )


                                      


முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது.உங்களின் பார்வைக்காக, இந்த பாடலின் பொருளும் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது…


திருப்புகழ் 6 முத்தைத்தரு (திருவருணை)

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ……
தனதான.. . ..


முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே


விளக்கம்:

முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான
பல்வரிசையும் இளநகையும் அமைந்த

அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே,

சத்திச் சரவண
 ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,

முத்திக்கொரு வித்துக் குருபர
 ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
விதையாக விளங்கும் ஞான குருவே,

எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர்
பரமசிவனார்க்கு

சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான
ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,

இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய
இருவரும்,

முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி
தேவர்களும் அடி பணிய நின்றவனே,

பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத்
தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,

ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்
கொண்டு பாற்கடலைக் கடைந்து,

ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்
பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,

பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு
என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ?

(இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை
விரிவாக வருணிக்கிறது).


தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,
சிலம்புகள் அணிந்த

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து
காளிதேவி

திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்
செய்யவும்,

கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,

திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்
தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**

சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
எனவோத
 ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக'
என்ற தாள ஓசையைக் கூறவும்,

கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை
வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,

களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்

குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
கொட்புற்றெழ
 ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு
'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச்
சுழன்று மேலே எழவும்,

நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத
மனப்பான்மையே கொண்ட அசுரர்களை

வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி
கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,

ஒத்துப் பொரவல பெருமாளே.... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த,
போர் செய்யவல்ல பெருமாளே.







வியாழன், 21 டிசம்பர், 2023

முருகன் 1008 பெயர்கள் போற்றி/Murugan 1008 Names potri in Tamil

    முருகன் 1008 பெயர்கள் போற்றி


முருகன் 1008 போற்றிகளை பதிவு செய்துள்ளோம் அவற்றை முழுமையாக படித்து. தமிழ் கடவுளான முருகனை வழிபடுங்கள். முருகனின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்க கூடும்.




ஓம் கழல் வீரா போற்றி ஓம் கரிமுகன் துணைவா போற்றி

ஓம் கயிலை மலைச் சிறுவா போற்றி ஓம் கருணை மேருவே போற்றி

ஓம் கந்த வேலவா போற்றி

ஓம் கடம்பணி காளையே போற்றி

ஓம் கதிர் வேலவனே போற்றி

ஓம் கருணை வெள்ளமே போற்றி

ஓம் கமலச் சேவடியாய் போற்றி ஓம் கந்த வேளே போற்றி

ஓம் கதியே போற்றி

ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கடம்புத் தொடையாய் போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் கடம்பந்தாராய் போற்றி
ஓம் கண்டிக் கதிர் வேலா போற்றி
ஓம் கடம்ப மாலையனே போற்றி
ஓம் கங்கை சூடி மைந்தனே போற்றி
ஓம் கதித்த மலைக்கனியே போற்றி
ஓம் கருணை வடிவே போற்றி

ஓம் கள்ளப் புலனைக் களைவாய் போற்றி
ஓம் கந்தபுரி வேளே போற்றி
ஓம் கல்வியும் செல்வமும் ஆனாய் போற்றி
ஓம் கருவாய் இருக்கும் கந்தா போற்றி
ஓம் கந்தக் கடம்பனே போற்றி
ஓம் கவிராசனே போற்றி
ஓம் கலப மயில் விசாகனே போற்றி
ஓம் கனகமலைக் காந்தா போற்றி
ஓம் கற்குடி மலையாய் போற்றி
ஓம் கச்சிப்பதியாய் போற்றி

ஓம் கருவூர் உறை கற்பகமே போற்றி
ஓம் கடம்பூர்க் கனியே போற்றி
ஓம் கரிய வனகர்க் கருணையே போற்றி
ஓம் கடவூர் உறையும் கருத்தே போற்றி
ஓம் கந்தன் குடி களிறே போற்றி
ஓம் கன்னபுரத்துச் சேயே போற்றி
ஓம் கந்தனூர் எந்தையே போற்றி
ஓம் கச்சி மாவடியாய் போற்றி
ஓம் கச்சிக் கச்சாலையாய் போற்றி
ஓம் காலிற் கழலினை உடையோய் போற்றி

ஓம் காங்கேய நல்லூர் முருகா போற்றி
ஓம் கான வள்ளியின் கணவா போற்றி
ஓம் காவலனே போற்றி
ஓம் கார்த்திகேயா போற்றி
ஓம் காப்பவனே போற்றி
ஓம் கானவர் தலைவா போற்றி
ஓம் காவடிப் பிரியனே போற்றி
ஓம் காம தேனுவே போற்றி
ஓம் கார்த்திகை மாதர் மகனே போற்றி
ஓம் காவளூர்க் கனியே போற்றி

ஓம் காசி கங்கையில் மேவினாய் போற்றி
ஓம் காமாத்தூர் உறை கருணையே போற்றி
ஓம் கிரியோனே போற்றி
ஓம் கிரிதோறும் மகிழ்வாய் போற்றி
ஓம் கிளரொளியே போற்றி
ஓம் கிரிமகள் புதல்வா போற்றி
ஓம் கிரௌஞ்ச மலை பிளந்தோய் போற்றி
ஓம் கீரனூர் உறைவாய் போற்றி
ஓம் கீரனுக்கு அருளினாய் போற்றி
ஓம் கீதக் கிண்கிணி பாதா போற்றி

ஓம் கீர்த்தியனே போற்றி
ஓம் குகவேலா போற்றி
ஓம் குகனே போற்றி
ஓம் குமாரா போற்றி
ஓம் குருமணியே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் குருநாதா போற்றி
ஓம் குன்றக்குடி குமரா போற்றி
ஓம் குமரேசா போற்றி
ஓம் குகமூர்த்தியே போற்றி

ஓம் குறத்தி கணவனே போற்றி
ஓம் குன்றங் கொன்றாய் போற்றி
ஓம் குன்றாக் கொற்றத்தாய் போற்றி
ஓம் குறிஞ்சிக் கிழவா போற்றி
ஓம் குன்றம் எறிந்தாய் போற்றி
ஓம் குன்றப் போர் செய்தாய் போற்றி
ஓம் குன்று துளைத்த குகனே போற்றி
ஓம் குன்றுதோறாடு குமரா போற்றி
ஓம் குழகனே போற்றி
ஓம் குமரக் கடவுளே போற்றி

ஓம் குன்றக் கடவுளே போற்றி
ஓம் குறிஞ்சித் தலைவனே போற்றி
ஓம் குருநாதக் குழந்தாய் போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் குமர குருபரனே போற்றி
ஓம் குமரகுருபரற்கருளினை போற்றி
ஓம் குறத்தி திறத்தோனே போற்றி
ஓம் குமர நாயகனே போற்றி
ஓம் குகேசனே போற்றி

ஓம் குறவர் மருகா போற்றி ஓம்
குறிஞ்சி நிலத்துக் கோனே போற்றி
ஓம் குறவர் கோவே போற்றி
ஓம் குராவடி வேலவனே போற்றி
ஓம் குன்றக் குறவர் கோமானே போற்றி
ஓம் குளிர் மலைவாழ் குணமே போற்றி
ஓம் குருபரனாக வந்தாய் போற்றி
ஓம் குழைந்தோன் குமரா போற்றி
ஓம் குன்றுதோறாடும் குழந்தாய் போற்றி
ஓம் குன்று தோறும் நின்றாய் போற்றி

ஓம் குரு சீலத்தோனே போற்றி
ஓம் குஞ்சரி கணவா போற்றி
ஓம் குன்றுநவ ஏவும் வேளேபோற்றி
ஓம் குருடி மலைக் குமரா போற்றி
ஓம் குமரக் கோட்டத்துறை கோவே போற்றி
ஓம் குடசை மாநகர் குகனே போற்றி
ஓம் குடந்தை உறையும் குழகா போற்றி
ஓம் குரங்காடு துறை கூத்தா போற்றி
ஓம் குறட்டி உறையும் குகனே போற்றி
ஓம் குளந்தை நகர் குழந்தாய் போற்றி

ஓம் குற்றாலத்துறை கோனே போற்றி
ஓம் குமரன் குன்றம் குடி கொண்டாய் போற்றி
ஓம் குருந்த மலை விருந்தே போற்றி
ஓம் கூறு மன்பர்க்குக் குழைவாய் போற்றி
ஓம் கூர்வேற் குமரனே போற்றி
ஓம் கூந்தலூர் முருகா போற்றி
ஓம் கூத்தனே போற்றி
ஓம் கூடல் குமரா போற்றி
ஓம் கூடலை யாற்றூர்க் குகனே போற்றி
ஓம் கூடல் ஆலவாயிலாய் போற்றி

ஓம் கொந்தவிழ் கடம்பா போற்றி
ஓம் கொங்குவை காவூர் நன்னாடா போற்றி
ஓம் கொங்கனகிரி குகனே போற்றி
ஓம் கொட்டையூர்க் குமரனே போற்றி
ஓம் கொடுமுடிக் குமரா போற்றி
ஓம் கொடும்பை நகர்க் கொழுந்தே போற்றி
ஓம் கோலப்பா போற்றி
ஓம் கோல நெடுவேற் குமரா போற்றி
ஓம் கோதிலா மாதவத்தோன் போற்றி
ஓம் கோழிக் கொடியோனே போற்றி

ஓம் கோலாகல வீரா போற்றி
ஓம் கோழிக் கொடிக் கோவே போற்றி
ஓம் கோசைநகர் வாழ்வே போற்றி
ஓம் கோடை நகர்க்கோவே போற்றி
ஓம் கோவை மாநகர்க் கோனே போற்றி
ஓம் கோடி நகர்க்குழகா போற்றி
ஓம் கௌமாரத் தலைவா போற்றி
ஓம் கௌமாரி புதல்வா போற்றி
ஓம் கௌமாரனே போற்றி
ஓம் சற்குண நேயா போற்றி

ஓம் சங்கத் தலைவனே போற்றி
ஓம் சரவணப் பெருமானே போற்றி
ஓம் சமரபுரி வேலா போற்றி
ஓம் சரவண குரவணி புயவேளே போற்றி
ஓம் சங்கரன் மதலாய் போற்றி
ஓம் சமர் புரிந்த முருகா போற்றி
ஓம் சந்தனச் சீதளனே போற்றி
ஓம் சண்முகத் தேவே போற்றி
ஓம் சமர சூரபன்மனைத் தடிந்தாய் போற்றி
ஓம் சங்கத் தமிழனே போற்றி

ஓம் சங்கத் திருந்தாய் போற்றி
ஓம் சங்கப் புலவனே போற்றி
ஓம் சக்தி வேலனே போற்றி
ஓம் சண்முக நாதனே போற்றி
ஓம் சக்திச் சரவணனே போற்றி
ஓம் சங்கபாணி மருகோனே போற்றி
ஓம் சங்கரபாணி மருகனே போற்றி
ஓம் சற்குரு நாதா போற்றி
ஓம் சம்புதரு பாலா போற்றி
ஓம் சக்தி தரித்தருள் பெருமானே போற்றி

ஓம் சங்கரற்குக் குருவே போற்றி
ஓம் சங்கரன் சேயே போற்றி
ஓம் சண்முகக் கடவுளே போற்றி
ஓம் சகல லோகர்க்கும் நண்பனே போற்றி
ஓம் சண்பைப் பதிமேவிய கந்தா போற்றி
ஓம் சக்கரப் பள்ளியாய் போற்றி
ஓம் சக்தி மலைச் சாமியே போற்றி
ஓம் சாந்தகுணசீலனே போற்றி
ஓம் சாந்த நாயகி புதல்வா போற்றி
ஓம் சாந்தமருள் குருவே போற்றி

ஓம் சிவந்த ஆடையனே போற்றி
ஓம் சித்தர்கள் குருவே போற்றி
ஓம் சிவன் சேயே போற்றி
ஓம் சிவாகமங்கள் பயில்வோனே போற்றி
ஓம் சிங்கார வேலனே போற்றி
ஓம் சிக்கல் நகராய் போற்றி
ஓம் சித்தத்துள் நிற்பாய் போற்றி
ஓம் சிவன்மலைச் சித்தா போற்றி
ஓம் சிவக்கொழுந்தே போற்றி
ஓம் சிவகுருநாதா போற்றி

ஓம் சிவகிரிக் குமரா போற்றி
ஓம் சிராமலைச் செல்வா போற்றி
ஓம் சிவகிரிப் பெருமானே போற்றி
ஓம் சிவசமயச் சிறுவா போற்றி
ஓம் சிந்தாமணியே போற்றி
ஓம் சிவலோகச் சேயே போற்றி
ஓம் சிந்தனைக் கினியாய் போற்றி
ஓம் சிவனார் மகிழும் சீலனே போற்றி
ஓம் சிவகலை ஆகம முடிவே போற்றி
ஓம் சிராப்பள்ளி வாழ்வே போற்றி

ஓம் சிறுவை நகர்ச் சீலா போற்றி
ஓம் சிகண்டியூர் உறை செவ்வேளே போற்றி
ஓம் சிவபுரத்துச் சிறுவா போற்றி
ஓம் சிங்கை நகர் சிறுவா போற்றி
ஓம் சிவகாசியுறை சேந்தா போற்றி
ஓம் சீரலைவாய் உறைவாய் போற்றி
ஓம் சீபுருடமங்கைச் சீரே போற்றி
ஓம் சீபரி பூரணனே போற்றி
ஓம் சுப்ரமணியனே போற்றி
ஓம் சுடர் வேலாய் போற்றி

ஓம் சுர பூபதியே போற்றி
ஓம் சுந்தரச் சோதியே போற்றி
ஓம் சுந்தரத் தோளனே போற்றி
ஓம் சுவாமி மலையானே போற்றி
ஓம் சுவாமி நாதனே போற்றி
ஓம் சுடரொளியோனே போற்றி
ஓம் சுத்த தத்துவனே போற்றி
ஓம் சுந்தரக் குகனே போற்றி
ஓம் சுடரொளிப் படையோய் போற்றி
ஓம் சுந்தரேசர் தந்த சுதனே போற்றி

ஓம் சூரனை வென்றாய் போற்றி
ஓம் சூரன்மாளத் தோன்றினாய் போற்றி
ஓம் சூலகரனே போற்றி
ஓம் சூரபன்மன் கடற்றே போற்றி
ஓம் சூரசங்கரனே போற்றி
ஓம் சூரர் குல காலா போற்றி
ஓம் சூர்ப்பகை அறுத்தாய் போற்றி
ஓம் சூரனை வதைத்தோய் போற்றி
ஓம் சூர் கடிந்த கொற்றவா போற்றி
ஓம் சூர் மருங்கு அறுத்தாய் போற்றி

ஓம் சூலபாணி பாலா போற்றி
ஓம் சூர்மா கடிந்த சுடரே போற்றி
ஓம் செவ்வேள் வினோதா போற்றி
ஓம் செவ்வேளே போற்றி
ஓம் செருவில் ஒருவா போற்றி
ஓம் செந்தில் வாழ்வே போற்றி
ஓம் செய்யனே போற்றி
ஓம் செச்சைக் கண்ணியனே போற்றி
ஓம் செஞ்சிலை வீரா போற்றி
ஓம் செங்கழு நீர் மாலையனே போற்றி

ஓம் சூலபாணி பாலா போற்றி
ஓம் சூர்மா கடிந்த சுடரே போற்றி
ஓம் செவ்வேள் வினோதா போற்றி
ஓம் செவ்வேளே போற்றி
ஓம் செருவில் ஒருவா போற்றி
ஓம் செந்தில் வாழ்வே போற்றி
ஓம் செய்யனே போற்றி
ஓம் செச்சைக் கண்ணியனே போற்றி
ஓம் செஞ்சிலை வீரா போற்றி
ஓம் செங்கழு நீர் மாலையனே போற்றி

ஓம் செச்சையணி மார்பா போற்றி
ஓம் செங்கல்வராயனே போற்றி
ஓம் செந்தாமரைப் பாதனே போற்றி
ஓம் செம்பொருளே போற்றி
ஓம் செழுமணி மார்பா போற்றி
ஓம் செங்கோடனே போற்றி
ஓம் செல்வனே போற்றி
ஓம் செந்தமிழ்ப் புலவா போற்றி
ஓம் சென்னிமலைச் சீலா போற்றி
ஓம் செச்சை அம் தாரோனே போற்றி

ஓம் செல்வம் அருள்பவனே போற்றி
ஓம் சேவலோனே போற்றி
ஓம் சேப்படைச் சத்தியோனே போற்றி
ஓம் சேவகனே போற்றி
ஓம் சேனாதிபதியே போற்றி
ஓம் சேவற் கொடியோனே போற்றி
ஓம் சேவலும் மயிலும் சேர்ந்தாய் போற்றி
ஓம் சேந்தனே போற்றி
ஓம் சேததண்ட விநோதா போற்றி
ஓம் சேலத்தமர் சேயோனே போற்றி

ஓம் சைவக் கொழுந்தே போற்றி
ஓம் சைல வாழ்வே போற்றி
ஓம் சொற்பொருள் கடந்தாய் போற்றி
ஓம் சோதியே போற்றி
ஓம் சோலைமலைக் கிழவனே போற்றி
ஓம் சோம நாதன் மடத்துச் சோதி போற்றி
ஓம் சோமீச்சரத்துச் சுடரே போற்றி
ஓம் சோணக்கிரியானே போற்றி
ஓம் சௌந்தர நாயகி புதல்வா போற்றி
ஓம் சௌந்தர வடிவா போற்றி

ஓம் சௌபாக்கியம் தருவோனே போற்றி
ஓம் ஞானசத்திநி பாதா போற்றி
ஓம் ஞான பண்டிதா போற்றி
ஓம் ஞானாம்பிகை மகனே போற்றி
ஓம் ஞான பூரணனே போற்றி
ஓம் ஞான சக்தி தரனே போற்றி
ஓம் ஞான தண்டாயுத பாணியே போற்றி
ஓம் ஞான குருவே போற்றி
ஓம் ஞான நெஞ்சினிற் பாலா போற்றி
ஓம் ஞான மலை நாதா போற்றி

ஓம் ஞானவிளக்கே போற்றி
ஓம் ஞானப்பரிதியே போற்றி
ஓம் ஞானக்கடலே போற்றி
ஓம் ஞானேசனே போற்றி
ஓம் ஞானப் பொருளே போற்றி
ஓம் தணிகை மலையானே போற்றி
ஓம் தத்துவ சொரூபனே போற்றி
ஓம் தணிகை மலைத் தலைவா போற்றி
ஓம் தண்டாயுத பாணியே போற்றி
ஓம் தமிழ் வேளே போற்றி

ஓம் தயாநிதியே போற்றி
ஓம் தண்டம் ஏந்திய தலைவா போற்றி
ஓம் தயாபரனே போற்றி
ஓம் தனிச்சுடரே போற்றி
ஓம் தண்தார் பூண்ட கடம்பா போற்றி
ஓம் தந்தைக்கு வேதம் ஓதினோய் போற்றி
ஓம் தண்தார் வேலவா போற்றி
ஓம் தமிழ்க் கடவுளே போற்றி
ஓம் தந்தை நாதனே போற்றி
ஓம் தமிழுருவாய் நின்ற முருகா போற்றி

ஓம் தந்தியின் கொம்பைப் புணர்வோனே போற்றி
ஓம் தமிழ்மொழி இன்பில் தழைப்பாய் போற்றி
ஓம் தகர் கடாவும் தனிமுதலே போற்றி
ஓம் தச்சூர் அமர்ந்த தலைவா போற்றி
ஓம் தஞ்சை மாநகர் வேலா போற்றி
ஓம் தவத்துறைத் தலைவா போற்றி
ஓம் தணிச்சயத்துத் தவமே போற்றி
ஓம் தானைத் தலைவா போற்றி
ஓம் தாரகற் கொன்ற தாழ்விலாய் போற்றி
ஓம் தான்தோன்றியுறை தலைவா போற்றி

ஓம் தாரகாந்தனே போற்றி
ஓம் தாரைவேல் தலைவா போற்றி
ஓம் தாயாகிக் காப்பாய் போற்றி
ஓம் திண்புய வேளே போற்றி
ஓம் திருமார்பா போற்றி
ஓம் திறல் வேலா போற்றி
ஓம் திருத்தணி வேலா போற்றி
ஓம் திருத்தாளனே போற்றி
ஓம் திருமால் மருகா போற்றி
ஓம் திருப்பரங்குன்ற வாழ்வே போற்றி

ஓம் திருவாவினன் குடிச் செல்வா போற்றி
ஓம் திருவேரகத் தெந்தாய் போற்றி
ஓம் திருத் தணிகை மலையாய் போற்றி
ஓம் திருக்கை வேலா போற்றி
ஓம் திருச்சீரலைவாய் உறைவாய் போற்றி
ஓம் திருத்தணிக் கிழவா போற்றி
ஓம் திருநெடுங் குமரா போற்றி
ஓம் திரைகடல் பருகும் வேலா போற்றி
ஓம் திருச்செந்தூர்த் தெய்வமே போற்றி
ஓம் திருமால் மருகோனே போற்றி

ஓம் திருவிலஞ்சிக் குமரா போற்றி
ஓம் திருச்செங்கோட்டு இறைவா போற்றி
ஓம் திருவல்லத்துத் திருவே போற்றி
ஓம் திருப்புகழோனே போற்றி
ஓம் திருமகள் மருகா போற்றி
ஓம் திருமுருகாற்றுப் படையுளாய் போற்றி
ஓம் திருப்பேரூர் முருகா போற்றி
ஓம் திருப்புகழ் வேளே போற்றி
ஓம் திருப்புகழ் பெற்றோய் போற்றி
ஓம் திருவருள் தருவோனே போற்றி

ஓம் திருவிடைக் கழித் தலைவா போற்றி
ஓம் திருவினும் திருவே போற்றி
ஓம் தித்திக்கும் அமுதே போற்றி
ஓம் திவ்ய ரூபனே போற்றி
ஓம் திகழ் புயனே போற்றி
ஓம் திறவோனே போற்றி
ஓம் திருத்தணிக் காவலனே போற்றி
ஓம் திருமாமணியே போற்றி
ஓம் திகழ் மார்போனே போற்றி
ஓம் திருப்புகழ் நாதா போற்றி

ஓம் திருத் தோளனே போற்றி
ஓம் திருவார் மறையின் செம்பொருளே போற்றி
ஓம் திருச்செந்தில் வளர் சேவகா போற்றி
ஓம் திசைமுகம் விளக்கும் தேவா போற்றி
ஓம் திங்களின் ஒளிரும் சீர்முகா போற்றி
ஓம் திருப்பரங்கிரிதனில் உறைவாய் போற்றி
ஓம் திருமலைத் திருவே போற்றி
ஓம் திருவேங்கட மாமலையாய் போற்றி
ஓம் திரிமூர்த்திகள் தம்பிரானே போற்றி
ஓம் திருக்கழுக் குன்றத் திருவே போற்றி

ஓம் திருக்கோணமலைத் தேனே போற்றி
ஓம் திருக்காளத்தித் தேவா போற்றி
ஓம் திருவிரிஞ்சைத் திருவே போற்றி
ஓம் திருவாலங்காட்டுத் தெளிவே போற்றி
ஓம் திருவோத்தூர் தலைவா போற்றி
ஓம் திருவல்லிதாயம் உறைவாய் போற்றி
ஓம் திருவான்மியூர்த் தேனே போற்றி
ஓம் திருவொற்றியூரா போற்றி
ஓம் திருப்போரூருறை தேவா போற்றி
ஓம் திருவக்கரை உறைவோனே போற்றி

ஓம் திருவாமூர் வாழ்வே போற்றி
ஓம் திருவெண்ணெய் நல்லூராய் போற்றி
ஓம் திருவேற்களம் மேவிய தீரா போற்றி
ஓம் திருவரத்துறைத் தேனே போற்றி
ஓம் திருமுட்டத்துத் திகழொளியே போற்றி
ஓம் திருநல்லூர்த் தீங்கனியே போற்றி
ஓம் திருப்படித்தரைத் தேனே போற்றி
ஓம் திருவிடைக்கழிக் குமரா போற்றி
ஓம் திலதைப்பதித் தெளிவே போற்றி
ஓம் திருமாகாள நகர் முருகா போற்றி

ஓம் திருவாஞ்சியத்து அமரா போற்றி
ஓம் திரியம்பகபுரத்துத் தேனே போற்றி
ஓம் திருப்பெருந்துறையுறை குருவே போற்றி
ஓம் திருத்துருத்தி வாழ் முருகா போற்றி
ஓம் திருவீழி மிழலைவாழ் பெருமானே போற்றி
ஓம் திருவாவடுதுறை தேவா போற்றி
ஓம் திரிபுவனத்துத் தீரா போற்றி
ஓம் திருவலஞ்சுழி வாழ்வே போற்றி
ஓம் திருவாளிக் கூடற் பெருமானே போற்றி
ஓம் திருப்புத்தூர் அமர்ந்தாய் போற்றி

ஓம் தீர வேலா போற்றி
ஓம் தீப மங்கள சோதியானே போற்றி
ஓம் தீர்த்தமலைத் தீரனே போற்றி
ஓம் துதிக்கு உளம் மகிழ்வாய் போற்றி
ஓம் தூய அம்பல லீலா போற்றி
ஓம் தெய்வயானைத் துணைவா போற்றி
ஓம் தென்நாட்டுத் தெய்வமே போற்றி
ஓம் தென்பரங் குன்றனே போற்றி
ஓம் தெள்ளு தமிழே போற்றி
ஓம் தெளிந்தவர் தெய்வமே போற்றி

ஓம் பழனியப்பா போற்றி
ஓம் தென்றற்குரித் தேசிகனே போற்றி
ஓம் தெய்வயானை மணாளா போற்றி
ஓம் தென்சேரி கிரியாய் போற்றி
ஓம் தென்கடம்பந்துறையாய் போற்றி
ஓம் தேவ தேவே போற்றி
ஓம் தேவ சேனாதிபதியே போற்றி
ஓம் தேவர்கள் தம்பிரானே போற்றி
ஓம் தேனாற்றுக் குரிசிலே போற்றி
ஓம் தேசிகனே போற்றி

ஓம் தேவர்கள் சிறை மீட்டவனே போற்றி
ஓம் தேவர் கோவே போற்றி
ஓம் தேனே போற்றி
ஓம் தேவநாயகனே போற்றி
ஓம் தேவர்கள் பெருமானே போற்றி
ஓம் தேவகுஞ்சரி பாகா போற்றி
ஓம் தேவாதி தேவன் மைந்தா போற்றி
ஓம் தேவர்படைத் தலைவா போற்றி
ஓம் தேறுவார்க் கெளியாய் போற்றி
ஓம் தேவேலாய் ஆனாய் போற்றி

ஓம் தேனொடு தினைமா விளைந்தாய் போற்றி
ஓம் தேவனூர்த் தேவே போற்றி
ஓம் தைப்பூசம் உகந்தாய் போற்றி
ஓம் தொடியணி தோளா போற்றி
ஓம் தொல் புகழ் உடையோன் போற்றி
ஓம் தோகை மயிலோனே போற்றி
ஓம் நம்பி மருகனே போற்றி
ஓம் நற்றவ வேடம் பூண்டாய் போற்றி
ஓம் நவவீரர் தலைவா போற்றி
ஓம் நக்கீரர்க் குதவிய நாதா போற்றி

ஓம் நக்கீரர் பாடிய நம்பா போற்றி
ஓம் நஞ்சுண்டவர் பாலா போற்றி
ஓம் நவநீதன் மருகா போற்றி
ஓம் நடனங்கொள் வேலா போற்றி
ஓம் நந்தா விளக்கே போற்றி
ஓம் நன்றெல்லாம் நல்கிடும் முருகா போற்றி
ஓம் நக்கீரனைக் காத்தாய் போற்றி
ஓம் நவவீரர் நாயகனே போற்றி
ஓம் நல்லூர் உறையும் நண்பா
போற்றி ஓம் நான்மறை நாயகா போற்றி

ஓம் நாக பந்த மயூரா போற்றி
ஓம் நாரணன் மருகா போற்றி
ஓம் நாயகனே போற்றி
ஓம் நான்முகனைச் சிறையிட்டாய் போற்றி
ஓம் நாத விந்து கலாதீ போற்றி
ஓம் நாடாளு நாயகனே போற்றி
ஓம் நாகமலை நம்பீ போற்றி
ஓம் நாககிரி பெருமானே போற்றி
ஓம் நாவலூர் நம்பா போற்றி
ஓம் நாகபட்டினத்து நலமே போற்றி

ஓம் நாகேச்சரத்து நன்மணியே போற்றி
ஓம் நித்தியனே போற்றி
ஓம் நிறைகலையோனே போற்றி
ஓம் நித்தியமானவனே போற்றி
ஓம் நிலவு புகழ் ஆனாய் போற்றி
ஓம் நிமர் செல்வனே போற்றி
ஓம் நித்திலக் கொழுந்தே போற்றி
ஓம் நிம்பபுர வாணனே போற்றி
ஓம் நீலகண்டன் மகனே போற்றி
ஓம் நீதி தாங்கிய தேவா போற்றி

ஓம் நீபத் தொங்கலாய் போற்றி
ஓம் நீல மயில் நேசனே போற்றி
ஓம் நீக்கமற நின்றாய் போற்றி
ஓம் நீலி பெற்ற நிமலா போற்றி
ஓம் நூலறி புலவா போற்றி ஓம்
நெற்றிக்கண்ணன் மைந்தனே போற்றி
ஓம் நெடிய பிரானே போற்றி
ஓம் நெடுவரைக் கிழவா போற்றி
ஓம் நெடுவே லுடையாய் போற்றி
ஓம் நெடுவேல் அண்ணலே போற்றி

ஓம் நெடுவாயில் வீற்றிருந்தாய் போற்றி
ஓம் நெய்த்தானத்து நிமலா போற்றி
ஓம் நெடுங்களத்து நின்மலா போற்றி
ஓம் நெருவை நகர் நீதியே போற்றி
ஓம் நைவேர்க்கருள் நம்பா போற்றி
ஓம் பன்னிரு கரத்தாய் போற்றி
ஓம் பதினெண் கண்ணாய் போற்றி
ஓம் பன்னிரு தோளா போற்றி
ஓம் பச்சை மயில் வீரனே போற்றி
ஓம் பழனி மலை அதிபதியே போற்றி

ஓம் பரம சிவன் மைந்தனே போற்றி
ஓம் பழையோள் குழவீ போற்றி
ஓம் பன்னிருகையனே போற்றி
ஓம் பழமுதிர் சோலையாய் போற்றி
ஓம் பழநிக் கரசே போற்றி
ஓம் பழனி அண்ணலே போற்றி
ஓம் பருவம் முதிராப் பண்பே போற்றி
ஓம் படைகடல் தலைவா போற்றி
ஓம் பரங்குன்ற மர்ந்தாய் போற்றி
ஓம் பன்னிரு கண்ணுடையவனே போற்றி

ஓம் பல் வளமும் பணித்தருள்பவனே போற்றி
ஓம் பரனே போற்றி
ஓம் பல குன்றிலும் அமர்ந்தாய் போற்றி
ஓம் பழநிவாழ் முருகா போற்றி
ஓம் பழமுதிர் சோலைமலை கிழவனே போற்றி
ஓம் பலவளம் தரும் பரமா போற்றி
ஓம் பராசக்தி பாலனே போற்றி
ஓம் பழநி மலை வேலனே போற்றி
ஓம் பழநிக் கந்தனே போற்றி
ஓம் பதாம்புயனே போற்றி

ஓம் படைவேல் செம்மலே போற்றி
ஓம் பக்தருக்கெளியாய் போற்றி
ஓம் பவளவெற்பு அணையாய் போற்றி
ஓம் பலகலை சிவாகமங்கள் பயில்வோய் போற்றி
ஓம் பரம சீல சற்குண விலாசனே போற்றி
ஓம் பந்தணையில் வந்திடும் கந்தா போற்றி
ஓம் பனந்தாளுறையும் பாகே போற்றி
ஓம் பழையாரைப் பதியாய் போற்றி
ஓம் பழுவூர் உறையும் பரமா போற்றி
ஓம் பராய்த்துறை மேவிய பயனே போற்றி

ஓம் பட்டாலியூர்ப் பதியாய் போற்றி
ஓம் பங்குனி உத்திரம் உகந்தாய் போற்றி
ஓம் பாசமறுப்பாய் போற்றி
ஓம் பார்வதி மைந்தா போற்றி
ஓம் பாசங்கள் பறிப்போய் போற்றி
ஓம் பாலசுப்ரமணியா போற்றி
ஓம் பாக்கத்தில் உறையும் பண்பே போற்றி
ஓம் பாடலவள நகராய் போற்றி
ஓம் பாகைவள நகராய் போற்றி
ஓம் பிரம தேவர் வரதா போற்றி

ஓம் பிரணவப் பொருளே போற்றி
ஓம் பிரமனைச் சிறையிட்டவனே போற்றி
ஓம் பிரமனுக்குப் பிரணவம் அருளினாய் போற்றி
ஓம் பிரம குருவே போற்றி
ஓம் பிரமனைக் குட்டினோய் போற்றி
ஓம் பிரம்ம சாத்தானே போற்றி
ஓம் பிறை சூடி பிள்ளாய் போற்றி
ஓம் பீடுடையானே போற்றி
ஓம் பீதகவாடையானே போற்றி
ஓம் பீலி மயில் வாகனா போற்றி

ஓம் புலவர் ஏறே போற்றி
ஓம் புலவர் தலைவா போற்றி
ஓம் புலவோனே போற்றி
ஓம் புகழ் வேலா போற்றி
ஓம் புள்ளி மயில் புனிதா போற்றி
ஓம் புவி போற்றுபவனே போற்றி
ஓம் புகழ் சுவாமி மலையோனே போற்றி
ஓம் புகழி மலைப் புனிதா போற்றி
ஓம் புலியூர் உறை புகழே போற்றி
ஓம் பூதப் பொரு படையாய் போற்றி

ஓம் பூக்கும் கடம்பா போற்றி
ஓம் பூதலம் தனை ஆள்வாய் போற்றி
ஓம் பூம்பாறை உறைவாய் போற்றி
ஓம் பூந்துருத்திப் புனிதா போற்றி
ஓம் பூவாளூர்ப் புண்ணியனே போற்றி
ஓம் பெரியோனே போற்றி
ஓம் பெருமாளே போற்றி
ஓம் பெரிய நாயகி பெற்ற பிரானே போற்றி
ஓம் பெருஞ் செல்வா போற்றி
ஓம் பெரும் பெயர் முருகா போற்றி

ஓம் பெரும் பெயர்க் கடவுளே போற்றி
ஓம் பெருமை பிறங்கு பெரியோய் போற்றி
ஓம் பெருந்தகையே போற்றி
ஓம் பெருங்குடிப் பிரானே போற்றி
ஓம் பெரிய மடத்துப் பெருமானே போற்றி
ஓம் பெரும் புலியூர் வாழ்வே போற்றி
ஓம் பேறைநகர்ப் பெருமானே போற்றி
ஓம் பேரூர்ப் பெருமானே போற்றி
ஓம் பைந்தமிழ்த் தலைவா போற்றி
ஓம் பொருப்பைப் பொடித்தாய் போற்றி

ஓம் பொன்னே போற்றி
ஓம் பொருவிறல் மள்ளா போற்றி
ஓம் பொலம்பூண் சேயே போற்றி
ஓம் பொய்யிலா மனத்துள் புகுந்தாய் போற்றி
ஓம் பொன்னுலகை அருள்வோனே போற்றி
ஓம் பொருப்பிலுறை நாதா போற்றி
ஓம் பொன்னார் மணிமயில் ஏறினோய் போற்றி
ஓம் பொன்னார் திருவடியே போற்றி
ஓம் பொருவில் முருக நாதனே போற்றி
ஓம் பொதிய மலை முருகா போற்றி

ஓம் போர் மிகு பொருநனே போற்றி
ஓம் போதில் அமர்ந்த பொன்னே போற்றி
ஓம் போதகம் திரு கோவே போற்றி
ஓம் பௌவம் கலக்கிய படையாய் போற்றி
ஓம் மயில் மீதாடி வருவோய் போற்றி
ஓம் மஞ்ஞை ஏறிய மணியே போற்றி
ஓம் மறைஞான முதல்வா போற்றி
ஓம் மணிமார்பனே போற்றி
ஓம் மறைவேள்வி காவற்காரனே போற்றி
ஓம் மதியாளனே போற்றி

ஓம் மரகதக் கொடியின் மகனே போற்றி
ஓம் மணிவேல் மைந்தா போற்றி
ஓம் மரகத மயில் வீரா போற்றி
ஓம் மயில் வாகனா போற்றி
ஓம் மயூரப் பிரியனே போற்றி
ஓம் மலைமகள் மகனே போற்றி
ஓம் மங்கைமார் இருவர் மணாளா போற்றி
ஓம் மதவலியே போற்றி
ஓம் மலைக் கிழவோனே போற்றி
ஓம் மயிலேறும் மாணிக்கமே போற்றி

ஓம் மது சூதன் மருகா போற்றி
ஓம் மலை வாழ்வே போற்றி
ஓம் மயில் வாழ்வே போற்றி
ஓம் மருத மலையானே போற்றி
ஓம் மயிலம் வாழ்பவனே போற்றி
ஓம் மலையைப் பிளந்தோய் போற்றி
ஓம் மணியே போற்றி
ஓம் மயூரகிரி நாதனே போற்றி
ஓம் மங்கலப் பொருளே போற்றி
ஓம் மறைப் பொருளே போற்றி

ஓம் மந்திரப் பொருளே போற்றி
ஓம் மணிமுடி அழகிய பெருமானே போற்றி
ஓம் மருதமலைக் குமரா போற்றி
ஓம் மயிலைப் பதிதனில் உறைவோனே போற்றி
ஓம் மதுராந்தகத்து மணியே போற்றி
ஓம் மயேந்திரத்து மரகதமே போற்றி
ஓம் மருத்துவக்குடி மாண்பே போற்றி
ஓம் மாலைத் தோளனே போற்றி
ஓம் மான்மகள் மணாளா போற்றி
ஓம் மாவறுத்தாய் போற்றி

ஓம் மாணிக்க வேலா போற்றி
ஓம் மால் மருகா போற்றி
ஓம் மலயனுக்கு அரியானே போற்றி
ஓம் மாதவரைப் பிரியானே போற்றி
ஓம் மாற்றோர் கூற்றே போற்றி
ஓம் மாலை மார்பா போற்றி
ஓம் மாயோன் மருகனே போற்றி
ஓம் மாமுருகா போற்றி
ஓம் மா மணிக்கிரி வாசா போற்றி
ஓம் மாமலைக் கோமானே போற்றி

ஓம் மாறுகொள் சூரரை வதைத்தாய் போற்றி
ஓம் மாசறு திருவடி மலரோய் போற்றி
ஓம் மர்முதல் தடிந்த மறவா போற்றி
ஓம் மான்மகள் கோனே போற்றி
ஓம் மாயாபுரி மைந்தா போற்றி
ஓம் மாடையம்பதி வாழ்வே போற்றி
ஓம் மாதை நகருறை மணியே போற்றி
ஓம் மாந்துறையுறையும் மதியே போற்றி
ஓம் மின்னேர் அனைய சுடரே போற்றி
ஓம் மின்வேல் ஏந்தினாய் போற்றி

ஓம் மின்னலொளி அண்ணலே போற்றி
ஓம் முருகேசா போற்றி
ஓம் முந்நான்கு தோளுடையோனே போற்றி
ஓம் முகங்களோர் ஆறுடையாய் போற்றி
ஓம் முக்கண் உடையோய் போற்றி
ஓம் முழுதருட் புரியும் முத்தே போற்றி
ஓம் முனிவர் தம்பிரானே போற்றி
ஓம் முத்திக்கொரு வித்தே போற்றி
ஓம் முருக வேளே போற்றி
ஓம் முத்துக் குமரா போற்றி

ஓம் முத்துவேல் முருகா போற்றி
ஓம் முதல்வா போற்றி
ஓம் முழு முதலே போற்றி
ஓம் முன்னவனே போற்றி
ஓம் முத்தமிழிற் பெரியோனே போற்றி
ஓம் முருகென்னும் அழகே போற்றி
ஓம் முத்து இரத்தினமே போற்றி
ஓம் முத்தமிழ் விரகா போற்றி
ஓம் முருகச் சுரபூபதியே போற்றி
ஓம் முத்து நகை புரிபவனே போற்றி

ஓம் முத்தமிழ் மாலை முடியோய் போற்றி
ஓம் முந்தை வினையை முடிப்பாய் போற்றி
ஓம் முகுந்தன் மருகா போற்றி
ஓம் முதுகிரியுறை முருகா போற்றி
ஓம் முருகன் பூண்டி முதல்வா போற்றி
ஓம் முள்வாய் உறையும் முருகா போற்றி
ஓம் மூவர் போற்றும் முனிவா போற்றி
ஓம் மூவுலகாள்பவனே போற்றி
ஓம் மூலமந்திரப் பொருள் பகர்ந்தாய் போற்றி
ஓம் மெய்ஞ்ஞான அயிலோனே போற்றி

ஓம் மெய்ஞ்ஞானக் குகனே போற்றி
ஓம் மெய்ப்புலவர் கோவே போற்றி
ஓம் மேலோர்க்கும் மேலாய் போற்றி
ஓம் மைந்தர் ஏறே போற்றி
ஓம் மையனைய கண்டர் மகனே போற்றி
ஓம் மைவண்ணன் மருகா போற்றி
ஓம் மொழி முதற்பொருளே போற்றி
ஓம் மோட்சம் அருள்வோய் போற்றி
ஓம் மோஷாயன பட்டினத்து அரசே போற்றி
ஓம் வள்ளி நாயகனே போற்றி

ஓம் வடபழனி முருகா போற்றி
ஓம் வயலூர் வரதா போற்றி
ஓம் வரம் கொடுக்கும் வள்ளலே போற்றி
ஓம் வள்ளி மகிழ் மணாளா போற்றி
ஓம் வரதாமணியே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் வண்ணமயில் வாகனா போற்றி
ஓம் வயலூர்க் குமரா போற்றி
ஓம் வச்சிர வேலனே போற்றி
ஓம் வரிவில் வாளியனே போற்றி

ஓம் வற்றா அருள்சேர் குமரா போற்றி
ஓம் வள்ளி மலை வள்ளலே போற்றி
ஓம் வயலூரின் வாழ்வே போற்றி
ஓம் வயற் பழனி காக்கும் இறைவா போற்றி
ஓம் வளமையாளனே போற்றி
ஓம் வரை உறழ் திணி தோளா போற்றி
ஓம் வள்ளியூர் உறை பெருமானே போற்றி
ஓம் வடமலை வேலா போற்றி
ஓம் வயிரவி வனத்து வளவா போற்றி
ஓம் வடதிருமுல்லை வாயிலாய் போற்றி

ஓம் வளவா புரிவாழ்வே போற்றி
ஓம் வடுகூர் உறையும் வள்ளலே போற்றி
ஓம் வழுவூர் உறையும் வாழ்வே போற்றி
ஓம் வலிவலத்து வான் முகிலே போற்றி
ஓம் வானோர் தலைவா போற்றி
ஓம் வாரி கொடிய வினை தீர்த்தாய் போற்றி
ஓம் வானவர் தம்பிரானே போற்றி
ஓம் வானப் பைந்தொடி வாழ்வே போற்றி
ஓம் வாலிகொண்ட புரத்தாய் போற்றி
ஓம் வாகை மாநகர் வாழ்வே போற்றி

ஓம் வினை தீர்ப்பவனே போற்றி
ஓம் விராலி மலையானே போற்றி
ஓம் விமலனே போற்றி
ஓம் விகிர்தனே போற்றி
ஓம் வினை தீர்க்கும் வேலோய் போற்றி
ஓம் விண்ணவர் நாயகா போற்றி
ஓம் விண்ணவர் உலகங் காத்தோய் போற்றி
ஓம் விசாகத்து ஒளியே போற்றி
ஓம் விருத்தனாய் நின்றாய் போற்றி
ஓம் வில்லவனே போற்றி

ஓம் விளைவே போற்றி
ஓம் விநாயக மலை உறைவேலா போற்றி
ஓம் விற்குடியில் உறையும் வேந்தே போற்றி
ஓம் விசயபுரத்து வேந்தே போற்றி
ஓம் விசயமங்கலத்து வேளே போற்றி
ஓம் விசாவை உறையும் வேலா போற்றி
ஓம் வீர வேலா போற்றி
ஓம் வீரவாகு தோழா போற்றி
ஓம் வீறுகொண்ட விசாகா போற்றி
ஓம் வீடுபேற்றை அருளுவோய் போற்றி

ஓம் வீர கண்டனை கொள் வீரா போற்றி
ஓம் வெட்சி மாலையாய் போற்றி
ஓம் வெண்ணீறு அணிந்தாய் போற்றி
ஓம் வெள்ளி மலை வேந்தே போற்றி
ஓம் வெட்சித் தொடை புனைவாய் போற்றி
ஓம் வெற்றி வேலா போற்றி
ஓம் வெந்திறல் வேலோய் போற்றி
ஓம் வென்றிடு வேற்படை உடையோய் போற்றி
ஓம் வெற்பைக் கூறுசெய்தாய் போற்றி
ஓம் வெற்பொடும் அவுணனை அழித்தோய் போற்றி

ஓம் வெற்பிலுறை விளக்கே போற்றி
ஓம் வெற்பெலாம் நின்றாய் போற்றி
ஓம் வெற்றி வேலாயுதனே போற்றி
ஓம் வெள்ளிகரத்து வேந்தே போற்றி
ஓம் வெஞ்சமாக் கூடல் விகிர்தா போற்றி
ஓம் வேளூர் வாழ் முருகா போற்றி
ஓம் வேல்கெழு தடக்கையாய் போற்றி
ஓம் வேல் ஏந்தும் வேளே போற்றி ஓம் வேலப்பா போற்றி
ஓம் வேலாயுதனே போற்றி

ஓம் வேத நாயகனே போற்றி
ஓம் வேதப் பொருளே போற்றி
ஓம் வேள்விப் பயனே போற்றி
ஓம் வேலுமயிலுந் துணையருள்வாய் போற்றி
ஓம் வேதமந்திர சொரூபா போற்றி
ஓம் வேட்டுவக் கோலம் பூண்டாய் போற்றி
ஓம் வேங்கையின் உருவமானாய் போற்றி
ஓம் வேங்கை மலர் விருப்பா போற்றி
ஓம் வேற்படைவீரா போற்றி
ஓம் வேடுவர் கன்னித் தலைவா போற்றி

ஓம் வேடர் தங்கொடி மாலா போற்றி
ஓம் வேடர் நங்கை நாயகா போற்றி
ஓம் வேலும் கொடியும் உடையோய் போற்றி
ஓம் வேதப் பொருளாய் நின்றாய் போற்றி
ஓம் வேழ முகத்தோன் தோழா போற்றி
ஓம் வேடனாய் வந்தாய் போற்றி
ஓம் வேந்தனே போற்றி
ஓம் வேல் வீரனே போற்றி
ஓம் வேற்கை முனிவா போற்றி
ஓம் வேற்படைத் தேவே போற்றி

ஓம் வேற்காடுறையும் விமலா போற்றி
ஓம் வேப்பூர் அமர்ந்த விதியே போற்றி
ஓம் வேப்பஞ் சந்திக் கந்தனே போற்றி
ஓம் வேதவனத்தமர்ந்த வேலா போற்றி
ஓம் வேலவனென்னும் வித்தகா போற்றி
ஓம் வைரவேல் அழகா போற்றி
ஓம் வைவேற் புங்கவா போற்றி
ஓம் வையாபுரிக்கரசே போற்றி

போற்றி,போற்றி,போற்றி,போற்றி

மலர் ஜோதிடம் - முருகன் வழியில் சித்தர் வெளிப்படுத்தும் உண்மை!

 முருகன் அருளால் மலர் ஜோதிடம்: சித்தர் வாக்கு, நன்மை தரும் பலன்கள். பூக்களின் ஜோதிடம் என்பது வெறும் கணிப்பு முறை மட்டுமல்ல, இது நம் முன்னோர்...